ADDED : ஜூன் 11, 2024 11:22 PM
சங்கராபுரம், : சங்கராபுரம் பகுதியில் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிர மாக ஈடுபட்டு வருகின்றனர்.
சங்கராபுரம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை வருகிறது. இதன் காரணமாக கிணறு களில் நீர் மட்டம் சற்று அதிகரித்துள்ளது.
இதனால் இப்பகுதி விவசாயிகள் 10 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகளை துவங்கியுள்ளனர்.