Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்

இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்

இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்

இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்

ADDED : ஜூன் 25, 2024 06:08 AM


Google News
Latest Tamil News
கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராமசாமி தலைமை தாங்கினார். அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் விஜய், மாணவர் பெருமன்ற மாநில பொருளாளர் கணேசன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் ரீத்தா முன்னிலை வகித்தனர்.

மாணவர் பெருமன்ற மாநிலச் செயலாளர் தினேஷ், இந்திய கம்யூ., முன்னாள் மாவட்ட செயலாளர் சரவணன், விழுப்புரம் மாவட்ட செயலாளர் சவுரிராஜன் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில், கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.

இறந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய வேலை வாய்ப்பினை வழங்க வேண்டும்.

கல்வராயன்மலையில் கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழித்து, அங்கு வசிக்கும் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us