Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ முன்விரோத தகராறு: ஒருவர் கைது

முன்விரோத தகராறு: ஒருவர் கைது

முன்விரோத தகராறு: ஒருவர் கைது

முன்விரோத தகராறு: ஒருவர் கைது

ADDED : ஆக 02, 2024 02:16 AM


Google News
கள்ளக்குறிச்சி: கொங்கராயபாளையத்தில் முன்விரோதம் காரணமாக வீட்டின் கதவை உடைத்து 1.20 லட்சம் ரூபாயை திருடிச் சென்றது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி தாலுகா, கொங்கராயபாளையத்தைச் சேர்ந்தவர் தனசேகரன், 44; இவரது உறவினர் சித்தலுாரைச் சேர்ந்தவர் முத்துசாமி.

இருவருக்குமிடையே பூர்வீக சொத்து தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

கடந்த 24ம் தேதி முத்துசாமி உள்ளிட்ட அவரது தரப்பை சேர்ந்த சிலர் தனசேகரனை திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததுடன், அவரது வீட்டின் கதவை உடைத்து 1.20 லட்சம் ரூபாயை திருடிச் சென்றதாக தனசேகரன் வரஞ்சரம் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில், முத்துசாமி, 47; அவரது மனைவி வசந்தி மற்றும் அடையாளம் தெரியாத 2 பேர் மீது வழக்குப் பதிந்து, முத்துசாமியை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us