Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ சுகாதார துறை அலுவலர் சங்க பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

சுகாதார துறை அலுவலர் சங்க பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

சுகாதார துறை அலுவலர் சங்க பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

சுகாதார துறை அலுவலர் சங்க பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

ADDED : ஜூலை 21, 2024 07:59 AM


Google News
Latest Tamil News
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட பொது சுகாதார துறை அலுவலர் சங்கம் சார்பில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடந்தது.

சுகாதார அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் காந்தி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ரவி கோரிக்கை விளக்கவுரையாற்றினார். துணைத் தலைவர் மகாலிங்கம் சிறப்புரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் பொது சுகாதாரத் துறையில் ஆயிரக்கணக்கில் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் சுகாதார ஆய்வாளர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

சாலைப்பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் சாமிதுரை, தமிழ்நாடு அனைத்து மருந்தாளுநர் சங்க மாவட்ட செயலாளர் மலர்க்கொடி, சுகாதார ஆய்வாளர் சங்க மாவட்ட தலைவர் குமாரதேவன் உட்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us