Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ பெண் தூக்கிட்டு தற்கொலை

பெண் தூக்கிட்டு தற்கொலை

பெண் தூக்கிட்டு தற்கொலை

பெண் தூக்கிட்டு தற்கொலை

ADDED : ஜூலை 18, 2024 05:07 AM


Google News
திருக்கோவிலூர், : அரகண்டநல்லூர் அடுத்த மணம்பூண்டியைச் சேர்ந்தவர் மகாலிங்கம் மனைவி மேரி, 26; இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி எட்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது. கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிரிந்து தனது சொந்த ஊரான நெற்குணத்தில் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 2022 ம் ஆண்டு வடகரைத்தாழனூரை சேர்ந்த மகாலிங்கத்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு, மணம்பூண்டியில் தனியாக குடும்பம் நடத்தி வந்தனர். தற்பொழுது ஒன்பது மாத ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட சண்டையின் காரணமாக நேற்று முன்தினம் இரவு மேரி படுக்கை அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து மேரியின் தாய் வள்ளி கொடுத்த புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us