/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ டிராக்டர் மோதி தந்தை, மகன் காயம் டிராக்டர் மோதி தந்தை, மகன் காயம்
ADDED : ஜூலை 18, 2024 11:39 PM
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே சிறுவன் ஓட்டிய டிராக்டர் மோதி தந்தை, மகன் படு காயமடைந்தார்.
கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த மாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன், 42. இவர், பைக்கில் தனது மகன் விக்னேஸ்வரனுடன் ஆதிதிருவரங்கம் கோவிலுக்கு நேற்று முன் தினம் சென்று கொண்டிருந்தார். சு.கள்ளிப்பாடி அருகே சென்றபோது, எதிரே வந்த டிராக்டர் பைக் மீது மோதியது. இருவரும் படு காயம் அடைந்தனர். சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து மணலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, டிராக்டரை ஓட்டிச் சென்ற செம்படை கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனை தேடி வருகின்றனர்.