ADDED : ஜூலை 11, 2024 04:51 AM
கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அருகே காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்கோரி தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
சின்னசேலம் அடுத்த நாககுப்பத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் மகள் புவனேஸ்வரி,17; பத்தாம் வகுப்பு முடித்த புவனேஸ்வரி பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார்.
கடந்த 8ம் தேதிக்கு கடைக்கு செல்வதாக பெற்றோர்களிடம் தெரிவித்து விட்டு சென்ற புவனேஸ்வரி, நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை.
இதனால் அச்சமடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் புவனேஸ்வரியை தேடியுள்ளனர். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.