Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மயங்கி விழுந்த விவசாயி பலி

மயங்கி விழுந்த விவசாயி பலி

மயங்கி விழுந்த விவசாயி பலி

மயங்கி விழுந்த விவசாயி பலி

ADDED : மார் 15, 2025 12:35 AM


Google News
சங்கராபுரம்; சங்கராபுரம் அருகே வயலில் மயங்கி விழுந்து விவசாயி இறந்தார்.

சங்கராபுரம் அடுத்த எஸ்.வி.பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன், 45; விவசாயி. இவர், கடந்த 10 ஆண்டாக வலிப்பு நோயால் அவதிபட்டு வந்தார். இதற்காக மாத்திரைகள் சாப்பிட்டு வந்துள்ளார்.

நேற்று முன்தினம் காலை வயலில் வேலை செய்தபோது, வலிப்பு நோயால் மயங்கி வயலில் சேற்றில் தலைகுப்புற விழுந்தார்.

உடன், அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று முன்தினம் இரவு இறந்தார்.

புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us