ADDED : ஜூன் 22, 2024 04:22 AM
கள்ளக்குறிச்சி : எஸ்.ஒகையூரில் காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்கோரி அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி அடுத்த எஸ்.ஒகையூரைச் சேர்ந்தவர் ராஜதுரை மகள் சிவரஞ்சினி, 20; நர்சிங் முடித்து, சில வாரங்களாக வீட்டிலேயே உள்ளார்.
கடந்த 19ம் தேதி செவிலியர் பயிற்சி சான்றிதழ் வாங்க கல்லுாரிக்குச் செல்வதாக பெற்றோரிடம் கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது தந்தை ராஜதுரை அளித்த புகாரின் பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.