Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ ஊராட்சி பகுதிகளில் நாளை மக்களுடன் முதல்வர் முகாம்

ஊராட்சி பகுதிகளில் நாளை மக்களுடன் முதல்வர் முகாம்

ஊராட்சி பகுதிகளில் நாளை மக்களுடன் முதல்வர் முகாம்

ஊராட்சி பகுதிகளில் நாளை மக்களுடன் முதல்வர் முகாம்

ADDED : ஜூலை 30, 2024 11:29 PM


Google News
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத் தில் நாளை ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடக்கிறது.

கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் சிறந்த முறையில் நடந்து வருகிறது.

இம்முகாமில் 15 துறைகளைச் சேர்ந்த மனுக்கள் பெறப்பட்டு உடனடி தீர்வு காணப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக நாளை ஆக., 1ம் தேதி ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடக்கிறது.

சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்தில் குதிரைச்சந்தல் மற்றும் தகரை கிராமங்களிலும், தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியம் குருபீடபுரம் கிராமத்திலும் ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் முகாம் நடக்கிறது.

இம்முகாமில் சம்மந்தப்பட்ட கிராமப் பகுதி பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெற வேண்டும் என, தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us