ADDED : மார் 15, 2025 06:19 AM
சங்கராபுரம்; சங்கராபுரத்தில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டதில், போக்குவரத்து விதி மீறிய 27 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.
சங்கராபுரம் கடைவீதி மும்முனை சந்திப்பில் சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன் மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டியது. வேகமாக ஓட்டியது. 3 பேர் அமர்ந்து சென்றது.
குடிபோதையில் ஓட்டியது, ெஹல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியது என 27 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.