/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ தந்தையை தாக்கிய மகன் மீது வழக்கு தந்தையை தாக்கிய மகன் மீது வழக்கு
ADDED : ஆக 02, 2024 02:18 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே தந்தையை தாக்கிய மகன் மற்றும் மருமகள் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த பெருவங்கூரைச் சேர்ந்தவர் சோலைமுத்து, 61; இவருக்கு 3 மகன்கள். சோலைமுத்துக்கும், மூத்த மகன் சசிகுமாருக்கும் இடையே சொத்து தகராறு இருந்தது. கடந்த 20ம் தேதி மாலை சசிகுமார் அவரது மனைவி லட்சுமி ஆகியோர் சோலைமுத்துவை திட்டி தாக்கினர்.
இது குறித்து இரு தரப்பினரம் கொடுத்த புகாரின் பேரில், சசிகுமார், லட்சுமி, சோலை முத்து ஆகிய 3 பேர் மீதும் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.