Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ பைக் திருட்டு: ஒருவர் கைது

பைக் திருட்டு: ஒருவர் கைது

பைக் திருட்டு: ஒருவர் கைது

பைக் திருட்டு: ஒருவர் கைது

ADDED : ஜூலை 14, 2024 05:17 AM


Google News
கள்ளக்குறிச்சி, : சின்னசேலம் அருகே பைக் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.

சின்னசேலம் அடுத்த கனியாமூரைச் சேர்ந்தவர் முருகேசன், 41; இவர், கடந்த 3ம் தேதி பைக்கில், சின்னசேலம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அலுவலகத்திற்குள் சென்று பணிகளை முடித்து விட்டு வெளியே வந்து பார்த்த போது அவரது பைக் திருடு போனது.

இந்நிலையில், மூங்கில்பாடி சாலையில் உள்ள பழைய இரும்பு கடையில் காணாமல் போன பைக் இருப்பதாக முருகேசனுக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து முருகேசன் சென்று பார்த்த போது, பைக்கின் உதிரி பாகங்கள் பிரித்து போட்ட நிலையில் இருந்தது.

இதுகுறித்து சின்னசேலம் போலீசார் இரும்பு கடை உரிமையாளர் ஜெகனிடம் விசாரணை செய்தனர். அதில், பெத்தானுாரை சேர்ந்த காசி மகன் ஆனந்த், 32; என்பவர் பைக்கை திருடிவிற்றது தெரிந்தது. தொடர்ந்து, பைக் திருட்டில் ஈடுபட்ட ஆனந்தை போலீசார் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us