Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ திருக்கோவிலுார் சாய்பாபா கோவிலில் ஆண்டு விழா

திருக்கோவிலுார் சாய்பாபா கோவிலில் ஆண்டு விழா

திருக்கோவிலுார் சாய்பாபா கோவிலில் ஆண்டு விழா

திருக்கோவிலுார் சாய்பாபா கோவிலில் ஆண்டு விழா

ADDED : ஜூன் 25, 2024 06:13 AM


Google News
Latest Tamil News
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார், தியாகி வடிவேல் நகரில் உள்ள சீரடி குபேர சாய்பாபா கோவிலில் மூன்றாம் ஆண்டு துவக்க விழா நடந்தது.

அதனையொட்டி, காலை 8:00 மணிக்கு கோமாதா பூஜையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து கலச ஸ்தாபனம், யாகசாலை பூஜை, மூலவருக்கு பக்தர்களால் அபிஷேகம், ஆரத்தி பூஜை நடந்தது.

தொடர்ந்து மகா தீபாராதனையும், மதியம் 1:30 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இரவு 8:00 மணிக்கு ஆரத்தி பூஜை, 9:00 மணிக்கு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. ஏற்பாடுகள் ஆலய நிர்வாகி சுப்பு மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us