ADDED : ஜூன் 11, 2024 11:23 PM
கள்ளக்குறிச்சி, : சின்னசேலம் அடுத்த தென்தொரசலுார் சுடுகாட்டு பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அதில் தகரை கிராமத்தை சேர்ந்த பழனிசாமி, 35; கள்ளச்சாராயம் விற்பனை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் 110 லிட்டர் கள்ளச்சாரயத்தை பறிமுதல் செய்து பழனிசாமியை கைது செய்தனர்.