Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ போதையில் கிணற்றில் குளித்த வாலிபர் பலி

போதையில் கிணற்றில் குளித்த வாலிபர் பலி

போதையில் கிணற்றில் குளித்த வாலிபர் பலி

போதையில் கிணற்றில் குளித்த வாலிபர் பலி

ADDED : மார் 12, 2025 10:12 PM


Google News
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அருகே மதுபோதையில் கிணற்றில் குளித்த வாலிபர் இறந்தார்.

கள்ளக்குறிச்சி அடுத்த பொரசக்குறிச்சியை சேர்ந்த வெங்கடேசன் மகன் தெய்வீகன்,21; டிரைவர். நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு மதுபோதையில் அங்குள்ள விவசாய கிணற்றில் குளித்தார்.

அதிக மதுபோதையால் கிணற்றில் இருந்து ஏற முடியாமல் தண்ணீரில் மூழ்கி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us