Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ திருக்கோவிலுார், விழுப்புரம் அரசு கல்லுாரியில் நாளை 2ம் கட்ட கலந்தாய்வு

திருக்கோவிலுார், விழுப்புரம் அரசு கல்லுாரியில் நாளை 2ம் கட்ட கலந்தாய்வு

திருக்கோவிலுார், விழுப்புரம் அரசு கல்லுாரியில் நாளை 2ம் கட்ட கலந்தாய்வு

திருக்கோவிலுார், விழுப்புரம் அரசு கல்லுாரியில் நாளை 2ம் கட்ட கலந்தாய்வு

ADDED : ஜூன் 23, 2024 06:00 AM


Google News
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நாளை 24ம் தேதி இரண்டாம் கட்ட கலந்தாய்வு துவங்குகிறது.

அதனையொட்டி, அன்று பி.ஏ., தமிழ் பாடத்திற்கு 90 முதல் 82 வரை கட் ஆப் பெற்ற மாணவர்களுக்கும், பி.ஏ., ஆங்கில பாடத்திற்கு 60 முதல் 51வரை கட் ஆப் மாணவர்களுக்கும், பி.காம், வணிகவியல் பாடத்திற்கு 295 முதல் 225 வரை கட் ஆப் மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.

25ம் தேதி பி.எஸ்சி., வேதியியல் பாடத்திற்கு 286 முதல் 225 வரை கட் ஆப் பெற்றவர்களும், பி.எஸ்சி., கணினி அறிவியல் பாடத்திற்கு 281 முதல் 250 வரை கட் ஆப் மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறும்.

விழுப்புரம்


விழுப்புரம் அரசு கல்லுாரியில் நாளை 24ம் தேதி பி.எஸ்சி., - பி.சி.ஏ., பாடப்பிரிவிற்கும், 25ம் தேதி பி.ஏ., வரலாறு, பொருளியல், 26ம் தேதி பி.காம்., - பி.ஏ., வரலாறு, பொருளியல், விண்ணப்பித்த தொழிற்பிரிவு, அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது. 27ம் தேதி பிற்பட்ட வகுப்பினர், இஸ்லாமியர், அருந்ததியர், மலைவாழ் வகுப்பினருக்கான அனைத்து பாடப்பிரிவுகள், 28ம் தேதி பி.ஏ., தமிழ், ஆங்கிலம் பாடத்திற்கும் கலந்தாய்வு நடக்கிறது.

கலந்தாய்வில் பங்கேற்க வரும் மாணவர்கள் காலை 9:30 மணிக்கு முன்னதாகவே சேர்க்கை நடைபெறும் இடத்திற்கு வரவேண்டும். டவுன்லோட் செய்யப்பட்ட விண்ணப்பம், 10, 11, 12ம் வகுப்பிற்கான மதிப்பெண் பட்டியல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் அசல் மற்றும் இரண்டு நகல்கள், பாஸ்போர்ட் அளவு 3 புகைப்படம், வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அடையாள அட்டை நகல்களுடன், உரிய சேர்க்கை கட்டணத்தையும் எடுத்து வர வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us