/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ சாராயம், கஞ்சா விற்ற 2 பேர் கைது சாராயம், கஞ்சா விற்ற 2 பேர் கைது
ADDED : ஜூன் 08, 2024 04:17 AM
கள்ளக்குறிச்சி : சின்னசேலம் பகுதியில் வெவ்வேறு இடங்களில் சாராயம், கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சின்னசேலம் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பூசப்பாடி அம்மன் கோவில் அருகே, சாராயம் விற்ற கல்லாநத்தம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம், 56; என்பவரை கைது செய்து, 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
அதேபோல், பெத்தானுார் ரயில்வே கேட் அருகே கஞ்சா விற்ற அதே கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மகன் வெங்கடேசன், 20; என்பவரை கைது செய்து, 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.