ADDED : மே 22, 2025 01:39 AM
சென்னிமலை, மே 21
சென்னிமலையில், கார் திருடிய மதுரை மாவட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னிமலை அடுத்து அம்மாபாளையத்தை சேர்ந்தவர் சோமசுந்தரம், 43. இவர் கடந்த, 18ம் தேதி தன்னுடைய காரை வீட்டு முன் உள்ள, ெஷட்டில் நிறுத்தி இருந்தார். நேற்று முன்தினம் பார்த்த
போது காரை காணவில்லை. சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி, காரை திருடிய மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் விஜயராஜா, 28, என்பவரை கைது செய்து காரை பறிமுதல் செய்தனர்.