ADDED : ஜூன் 30, 2025 03:52 AM
அந்தியூர்: அந்தியூர் அருகே தவிட்டுப்பாளையம், அவினாசியப்பன் வீதியை சேர்ந்தவர் காளியப்பன், 59; கூலி தொழிலாளி. திருமண-மாகாதவர். குடிப்பழக்கத்தால் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
நேற்று முன்தினம் வீட்டில் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அலறி துடித்தவரை அக்கம்பக்கத்-தினர் மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்-டவர், நேற்று அதிகாலை இறந்தார். அந்தியூர் போலீசார் விசாரிக்-கின்றனர்.