ADDED : ஜூன் 26, 2025 01:57 AM
ஈரோடு, பைக் மீது, லாரி மோதி தொழிலாளி பலியானார்.
அரச்சலுார், பூசாரியூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சுரேஷ், 40, தொழிலாளி. கடந்த, 23ம் தேதி இவர் ஹோண்டா பைக்கில் சென்று கொண்டிருந்தார். சில்லாங்காட்டு புதுார் பகுதியை கடந்து கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த லாரி மோதியது. இதில் நிலை
தடுமாறி கீழே விழுந்த சுரேஷ், தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்து அதே இடத்தில் பலியானார். அரச்சலுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.