ADDED : செப் 18, 2025 01:57 AM
ஈரோடு, ஈரோடு-தொட்டிபாளையம் இடையே, ரங்கம்பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் மாலை, 4:00 மணியளவில், 55 வயது மதிக்கதக்க பெண் உடல் ரயில் தண்டவாளத்தின் அருகே கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து பெண் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கவனக்குறைவாக தண்டவாளத்தை தாண்டும் போது ரயில் மோதி உடல் சிதறி பலியானது தெரியவந்தது. இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. கோல்டன் கலர் ஜாக்கெட் அணிந்து இருந்தார். கத்திரிப்பூ கலர் பாவாடை, ப்ளூ கலரில் பூ போட்ட புடவை அணிந்து இருந்தார். ஈரோடு ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.