ADDED : மே 21, 2025 01:09 AM
பவானி :பவானி அருகே குறிச்சி பஞ்., கல்பாவி அரசு நடுநிலைப்பள்ளியில், மனு நீதி நாள் முகாம் நேற்று நடந்தது. இதில், 40 பயனாளிகளுக்கு, 14.48 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வழங்கினார்.
முகாமில் பவானி தாசில்தார் சித்ரா, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.