/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கீழ்பவானி 2ம் போகத்துக்கு நாளை தண்ணீர் திறப்புகீழ்பவானி 2ம் போகத்துக்கு நாளை தண்ணீர் திறப்பு
கீழ்பவானி 2ம் போகத்துக்கு நாளை தண்ணீர் திறப்பு
கீழ்பவானி 2ம் போகத்துக்கு நாளை தண்ணீர் திறப்பு
கீழ்பவானி 2ம் போகத்துக்கு நாளை தண்ணீர் திறப்பு
ADDED : ஜன 06, 2024 07:28 AM
ஈரோடு: பவானிசாகர் அணையில் இருந்து, கீழ்பவானி வாய்க்கால் ஒற்றைப்படை மதகுகள், சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் இரட்டை படை மதகுகளில் இரண்டாம் போக புன்செய் பாசனத்துக்கு, நாளை முதல் தண்ணீர் திறக்கப்படுகிறது.இப்பாசன பகுதியில் உள்ள, 1 லட்சத்து, 3,500 ஏக்கர் பாசன நிலங்களுக்கு, 11,500 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் நாளை முதல் மே, 1ம் தேதி காலை வரை திறப்பு, நிறுத்தம் முறையில் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில், நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் நேற்று முன்தினம், 816 கன அடியாக இருந்த நீர்வரத்து, 2,317 கன அடியாக நேற்று உயர்ந்தது.