/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ காளிங்கராயன் வாய்க்கால் பாசனத்துக்கு நீர் திறப்பு நிறுத்தம் காளிங்கராயன் வாய்க்கால் பாசனத்துக்கு நீர் திறப்பு நிறுத்தம்
காளிங்கராயன் வாய்க்கால் பாசனத்துக்கு நீர் திறப்பு நிறுத்தம்
காளிங்கராயன் வாய்க்கால் பாசனத்துக்கு நீர் திறப்பு நிறுத்தம்
காளிங்கராயன் வாய்க்கால் பாசனத்துக்கு நீர் திறப்பு நிறுத்தம்
ADDED : செப் 03, 2025 12:57 AM
பவானிசாகர், பவானிசாகர் அணையில் இருந்து காளிங்கராயன் பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டது.
பவானிசாகர் அணையில் இருந்து, கீழ்பவானி வாய்க்கால் மற்றும் அரக்கன்கோட்டை - தடப்பள்ளி மற்றும் காளிங்கராயன் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காளிங்கராயன் பாசனத்துக்கு திறக்கப்பட்ட, 300 கன அடி நீர் முற்றிலும் நிறுத்தப்பட்டது.அதேசமயம் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு, 2,300 கன அடி தண்ணீர், அரக்கன்கோட்டை-தடப்பள்ளி பாசனத்துக்கு, 950 கன அடி நீர்; குடிநீர் தேவைக்காக, 100 கன அடி நீர் என, 3,350 கன அடி தண்ணீர் நேற்று வெளியேற்றப்படுகிறது. நேற்று அணை நீர்மட்டம், 101.40 அடி; இருப்பு, 29.8 டி.எம்.சி.,; நீர்வரத்து, 1,546 கன அடியாக
இருந்தது.