Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ நீர் நிலை பள்ளத்தில் கழிவை கொட்டிய பஞ்., நிர்வாகம் நீர்வளத்துறை அதிகாரி அதிர்ச்சி

நீர் நிலை பள்ளத்தில் கழிவை கொட்டிய பஞ்., நிர்வாகம் நீர்வளத்துறை அதிகாரி அதிர்ச்சி

நீர் நிலை பள்ளத்தில் கழிவை கொட்டிய பஞ்., நிர்வாகம் நீர்வளத்துறை அதிகாரி அதிர்ச்சி

நீர் நிலை பள்ளத்தில் கழிவை கொட்டிய பஞ்., நிர்வாகம் நீர்வளத்துறை அதிகாரி அதிர்ச்சி

ADDED : மே 18, 2025 05:47 AM


Google News
அந்தியூர்: அந்தியூர் அருகே வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து வெளி-யேறும் உபரி நீரும், ஏரி பாசனத்துக்கு மதகு வழியாக திறக்கப்-படும் தண்ணீரும், நல்லாகவுண்டன்கொட்டாய் பள்ளம் வழியாக கெட்டிசமுத்திரம் ஏரிக்கு செல்கிறது.

எண்ணமங்கலம் பஞ்சாயத்தில் பல்வேறு கிராமங்களில் சேகரிக்-கப்பட்ட, மக்காத பிளாஸ்டிக் குப்பை கழிவை, இந்த பள்ளத்தில் நேற்று கொட்டினனர். ஒரே நாளில் மூன்று டிராக்டர் குப்பை பள்-ளத்தில் கொட்டப்பட்டுள்ளது. இவை தண்ணீரில் அடித்து செல்-லப்பட்டு கெட்டிசமுத்திரம் ஏரியில் தேங்கி அசுத்தமாக்கும். இது-குறித்து ஏற்கனவே நீர்வளத்துறையினர் எச்சரிக்கை விடுத்தி-ருந்தும், பஞ்சாயத்து நிர்வாகம் உதாசீனப்படுத்தி, கழிவை கொட்-டிய கண்டனத்துக்கு ஆளாகியுள்ளது.இதுகுறித்து அந்தியூர் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் கிருபாகரன் கூறியதாவது: சில மாதங்களுக்கு முன், எண்ணமங்-கலம் பள்ளத்தில் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளால், உபரி நீர் செல்ல முடியாமல் மதகுகளில் அடைத்து கொண்டது. அப்-போது பஞ்., தலைவர் உள்ளிட்டோரிடம் கழிவை கொட்டக்கூ-டாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்ச-ரித்தோம். தற்போது நல்லாகவுண்டன்கொட்டாய் பள்ளத்தில் கொட்டியுள்ளனர். பஞ்., நிர்வாகத்தின் மீது, கலெக்டர் மற்றும் அந்தியூர் பி.டி.ஓ.,வுக்கு புகார் அனுப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us