Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 2,291 கன அடியாக அதிகரிப்பு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 2,291 கன அடியாக அதிகரிப்பு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 2,291 கன அடியாக அதிகரிப்பு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 2,291 கன அடியாக அதிகரிப்பு

ADDED : ஜூன் 12, 2025 01:29 AM


Google News
பு.புளியம்பட்டி, பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான பவானிசாகர் வனப்பகுதி மற்றும் நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு நீர்வரத்து, 327 கன அடியாக இருந்த நிலையில் நேற்று நீர்வரத்து, 2,291 கன அடியாக அதிகரித்தது.

நேற்றைய நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம், 83.05 அடியாகவும், (மொத்த நீர்மட்டம் 105அடி) நீர் இருப்பு 17.3 டி.எம்.சி.,யாகவும் உள்ளது. ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், பரவலாக மழை பெய்துள்ளதால் அணையில் இருந்து அரக்கன்கோட்டை தடப்பள்ளி பாசனத்திற்காக திறக்கப்பட்ட, 800 கன அடி தண்ணீர், 400 கன அடியாக குறைக்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us