Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/அரசாணைப்படி ஊதியம்; அமலானதற்கு வரவேற்பு

அரசாணைப்படி ஊதியம்; அமலானதற்கு வரவேற்பு

அரசாணைப்படி ஊதியம்; அமலானதற்கு வரவேற்பு

அரசாணைப்படி ஊதியம்; அமலானதற்கு வரவேற்பு

ADDED : ஜன 06, 2024 07:28 AM


Google News
ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில், 1,300க்கும் மேற்பட்ட தினக்கூலி தொழிலாளர்கள் பணி செய்கின்றனர்.

இவர்களுக்கு தொழிலாளர் துறை அரசாணைப்படி, மாவட்ட நிர்வாகம் குறைந்தபட்ச ஊதியமான நாள் ஒன்றுக்கு, 707 ரூபாய் என வழங்கினர். கடந்த ஆக., மாதம் முதல் ஊதியம், 687 ரூபாயாக குறைக்கப்பட்டது. இதை கண்டித்து ஏ.ஐ.டி.யு.சி., - சி.ஐ.டி.யு., உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கம் சார்பில் போராட்டம் நடத்தினர்.இந்நிலையில், ஈரோடு தொழிலாளர் துறை சார்பில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் கோரிக்கையை ஏற்று, அரசாணைப்படி குறைந்த பட்ச ஊதியம் வழங்க மாநகராட்சி நிர்வாகத்தை அறிவுறுத்தினர். இதன்படி டிச., மாத ஊதியத்தை நாள் ஒன்றுக்கு, 724 ரூபாய் வீதம் உயர்த்தி வழங்கி உள்ளது. இதற்கு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர், தொழிலாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us