Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ போதை மாத்திரையுடன் இரு வாலிபர்கள் கைது

போதை மாத்திரையுடன் இரு வாலிபர்கள் கைது

போதை மாத்திரையுடன் இரு வாலிபர்கள் கைது

போதை மாத்திரையுடன் இரு வாலிபர்கள் கைது

ADDED : ஜூன் 07, 2025 01:43 AM


Google News
ஈரோடு, போதை மாத்திரை விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்படி, வீரப்பன்சத்திரம் எஸ்.ஐ., சபியுல்லா தலைமையிலான போலீசார், பெரியவலசு பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்ற இருவரை பிடித்து விசாரித்தனர்.

அந்தியூர், குந்துபாரியூர் முபாரக் அலி மகன் கொபர் அலி, 19; பெரியவலசு, முத்துமாரியம்மன் கோவில் பகுதி நாகராஜ் மகன் பிரவீன், 19, என தெரிந்தது. வலி நிவாரண மாத்திரை எனக்கூறி போதை மாத்திரைகளை விற்றது தெரியவந்தது. இருவரையும் கைது செய்து, 10 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us