ADDED : ஜூலை 05, 2024 02:59 AM
பெருந்துறை:பவானியை
சேர்ந்தவர் செல்வராஜ், 47; குமாரபாளையத்தில் இருந்து பெருந்துறை
சிப்காட்டுக்கு, காரில் சென்றார். சோளிபாளையத்தில் ஒரு ஹோட்டலில்
சாப்பிட்டு வந்தபோது, காரின் கண்ணாடியை உடைத்து, இரு லேப்டாப், பேங்க்
லாக்கர் கீ மற்றும் காருக்குரிய ஆவணங்கள் திருட்டு போனது தெரிந்தது.
இதுகுறித்து
புகாரின்படி பெருந்துறை போலீசார் விசாரித்து வந்தனர். பவானி,
தொட்டிபாளையம், மோளகவுண்டன்புதுாரை சேர்ந்த ராஜா, ௨௫; சேலம்,
நெய்க்காரபட்டியை சேர்ந்த கவுரிசங்கர், 41, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.