ADDED : அக் 07, 2025 01:38 AM
சத்தியமங்கலம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூர் வனச்சரகம் எக்கத்துார் பகுதியில் சில நாட்களுக்கு முன் வனத்துறையினர் ரோந்து சென்றனர்.
அப்போது ஒரு புலி கழுத்தில் காயத்துடன் இறந்து கிடந்தது. கால்நடை மருத்துவரை வரவழைத்து அதே இடத்தில் உடற்கூறு பரிசோதனை செய்தனர். இதில் நான்கு வயதான ஆண் புலி என்பதும், மற்றொரு புலியுடன் சண்டையிட்டதில் படுகாயம் அடைந்ததில் இறப்பு நேரிட்டதாகவும், வனத்துறையினர் தெரிவித்தனர்.


