Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/சிவன்மலையில் நிலை சேர்ந்த தைப்பூச தேர்

சிவன்மலையில் நிலை சேர்ந்த தைப்பூச தேர்

சிவன்மலையில் நிலை சேர்ந்த தைப்பூச தேர்

சிவன்மலையில் நிலை சேர்ந்த தைப்பூச தேர்

ADDED : ஜன 29, 2024 12:01 PM


Google News
காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவில், நடப்பாண்டு தைப்பூசத் தேரோட்ட நிகழ்வு, கடந்த, 26ம் தேதி மாலை தொடங்கியது. மாலை, 4:40 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்பட்டு இழுக்கப்பட்ட நிலையில், 5:20 மணிக்கு தெற்கு வீதியில் நிலை நிறுத்தப்

பட்டது.

இரண்டாவது நாளான நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு தேர் மலையை சுற்றிவந்து கோசமலை பகுதியில் நிறுத்தப்பட்டது. நேற்று மாலை, 4:00 மணிக்கு மீண்டும் தேர் வடம் பிடிக்கப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு தேரை வடம்

பிடித்தனர்.

அரோகரா கோஷமிட்டபடி இழுத்து சென்றனர். மாலை, 6:40 மணிக்கு தேர் நிலை அடைந்தது. இன்று காலை, 9:௦௦ மணிக்கு காலசாந்தி திருக்கோயில் மற்றும் பல்வேறு சமுதாய மக்களின் மண்டப கட்டளை நடக்கிறது. மஞ்சள் நீராட்டு விழாவை தொடர்ந்து, சுவாமி மலைக்கு எழுந்தருளும். அதை தொடர்ந்து கொடி இறக்கப்பட்டு, தைப்பூச விழா நிறைவுக்கு வரும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us