/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்காலில் முதல் போக சாகுபடிக்காக நீர் திறப்புதடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்காலில் முதல் போக சாகுபடிக்காக நீர் திறப்பு
தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்காலில் முதல் போக சாகுபடிக்காக நீர் திறப்பு
தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்காலில் முதல் போக சாகுபடிக்காக நீர் திறப்பு
தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்காலில் முதல் போக சாகுபடிக்காக நீர் திறப்பு
ADDED : ஜூலை 13, 2024 12:47 AM
கோபி: தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்காலின், முதல் போக சாகுபடிக்காக, நேற்று தண்ணீர் திறக்கப்பட்-டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணையில் தடுக்கப்பட்டு, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்கால் மூலம், 24 ஆயிரத்து, 504 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இரு பாசனங்களுக்கும், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, நேற்று காலை 9:45 மணிக்கு, முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தடப்பள்ளி வாய்க்காலில், 300 கன அடி, அரக்கன்கோட்டை வாய்க்காலில், 200 கன அடி திறக்கப்பட்டது. வரும் நாட்களில் நீர் திறப்பு படிப்-படியாக உயர்த்தப்படும். நவ.,8ம் தேதி வரை, 120 நாட்களுக்கு நீர் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்-தனர்.
இந்நிகழ்வில் கோபி நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் கல்பனா, எம்.பி., அந்தியூர் செல்-வராஜ், தி.மு.க., மாவட்ட செயலாளர் நல்லசிவம், தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசன சங்க தலைவர் சுபி-தளபதி உட்பட பலர் பங்கேற்றனர். தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனங்களுக்கு, நீர் திறப்பு நிகழ்வில் இதுவரையில், ஆளுங்கட்சி பிரமு-கர்கள், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் மட்டுமே அதிகம் பங்கேற்றுள்ளனர். கோபி ஆர்.டி.ஓ., அல்லது சப்-கலெக்டர் அந்தஸ்த்தில் வருவாய் துறை அதிகாரிகள் பங்கேற்றதில்லை. நேற்று நடந்த நிகழ்வில், கோபி ஆர்.டி.ஓ., கண்ணப்பன், கோபி தாசில்தார் கார்த்திக் பங்கேற்றனர். இதுகுறித்து ஆர்.டி.ஓ., கண்ணப்பனிடம் கேட்டதற்கு, ''கலெக்டர் உத்தரவின் பேரில் பங்கேற்றேன்,'' என்றார்.