ADDED : மே 04, 2026 03:35 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மாவட்டத்தில் அரசு, நிதியுதவி பள்ளிகளுக்கு முழு ஆண்டு தேர்வு
விடுமுறை ஏப்.,17ம் தேதி முதல் விடப்பட்டுள்ளது. அடுத்த கல்வி
ஆண்டுக்கு பள்ளிகள் ஜூன், 1ல் துவங்குகிறது. 1-3 வகுப்புக்கு ஜூன்,
4ல் துவங்குகிறது.
ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ,
மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டுகள் ஈரோடு மாவட்டத்துக்கு
அரசு சார்பில் வந்த வண்ணம் உள்ளன. நோட்டு, புத்தகங்கள் இந்த வார
இறுதியில் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இதுபற்றி பள்ளி
கல்வி துறையினர் கூறியதாவது: ஏழாம் வகுப்பு ஆங்கில மீடியம் கணித பாட
புத்தகம், 80 குயர் நோட்டு தவிர ஏனைய புத்தகம், நோட்டுகள் வந்து
விட்டன. பள்ளி திறக்கும் நாளில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும்.
இவ்வாறு கூறினர்.





