Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மாநகராட்சியில் வரி பாக்கி; 500 பேருக்கு நோட்டீஸ்

மாநகராட்சியில் வரி பாக்கி; 500 பேருக்கு நோட்டீஸ்

மாநகராட்சியில் வரி பாக்கி; 500 பேருக்கு நோட்டீஸ்

மாநகராட்சியில் வரி பாக்கி; 500 பேருக்கு நோட்டீஸ்

ADDED : ஜூலை 10, 2024 07:25 AM


Google News
ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில் மொத்தம், 1 லட்சத்து, 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வரி செலுத்துகின்றனர்.

இதில், 2023-24ம் ஆண்டுக்கான சொத்து, குடிநீர், குத்தகை வரிகளில், 85 சதவீதம் வசூலாகியுள்ளது. 15 சதவீதம் பாக்கி உள்ளது. அதாவது, 2023-24ம் ஆண்டுக்கான, 85 கோடி ரூபாய் வரியில், 71 கோடி ரூபாய் வசூலாகி, 14 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. இதனால் வரி செலுத்தாத, 500க்கும் மேற்பட்டோருக்கு, மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இதுகுறித்து உதவி ஆணையர் அண்ணாதுரை (வருவாய் பிரிவு) கூறியதாவது: கடந்த, 2023-24ம் ஆண்டுக்கான வரியில், 14 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. வரி செலுத்தாத, 500க்கும் மேற்பட்டோருக்கு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதேசமயம், 2024 - 2025ம் ஆண்டுக்கான வரி வசூல், ஜூன் 1 முதல் தொடங்கியுள்ளோம். இந்தாண்டில், 88 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டும். இதுவரை, 15 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us