Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மணிக்கூண்டு ரோட்டில் திடீர் குழி வாகன ஓட்டிகள், மக்கள் அதிர்ச்சி

மணிக்கூண்டு ரோட்டில் திடீர் குழி வாகன ஓட்டிகள், மக்கள் அதிர்ச்சி

மணிக்கூண்டு ரோட்டில் திடீர் குழி வாகன ஓட்டிகள், மக்கள் அதிர்ச்சி

மணிக்கூண்டு ரோட்டில் திடீர் குழி வாகன ஓட்டிகள், மக்கள் அதிர்ச்சி

ADDED : அக் 06, 2025 04:32 AM


Google News
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி, 36வது வார்டு மணிக்கூண்டு பகுதியில் ஏராளமான மொத்தம், சில்லறை ஜவுளி விற்பனை கடை செயல்-பட்டு வருகிறது. மாநகரில் எப்போதும் போக்குவரத்து நிறைந்த பகுதிகளில் ஒன்றாக உள்ளது. நேற்று மதியம், 2:30 மணியளில் மணிக்கூண்டு அமைந்திருக்கும் இடத்தில் சாலையில், திடீரென பள்ளம் ஏற்பட்டது. இதைக்கண்ட மக்கள் அதிர்ச்சிக்கு ஆளா-கினர். வாகன ஓட்டிகளும் சுதாரித்து வாகனங்களை நிறுத்தி-யதால், பள்ளத்தில் சிக்காமல் தப்பித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், பள்ளத்தை சுற்றிலும் பேரிகார்டு வைத்து தடுத்-தனர். போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர்.

அவர்களின் தகவலை தொடர்ந்து மாநகராட்சி, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனர். ஜே.சி.பி., வாகனம் மூலம் பள்ளத்தை சரிசெய்து, ரெடிமிக்ஸ் மூலம் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அப்பகுதி கடைக்காரர் ஒருவர் கூறியதாவது: பள்ளம் ஏற்பட்ட இடத்தில் ரோட்டுக்கு அடியில் பாதாள சாக்-கடை செல்கிறது. அவ்வப்போது கழிவுநீர் கசிந்து வந்தது. இத-னால்மண் அரிப்பு ஏற்பட்டு பள்ளம் உருவாகியுள்ளது. பகல் நேரம் என்பதால் அசம்பாவிதம் நடக்கவில்லை. இவ்வாறு கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us