Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தந்தையை தாக்கிய மகன் கைது

தந்தையை தாக்கிய மகன் கைது

தந்தையை தாக்கிய மகன் கைது


ADDED : ஜூலை 10, 2025 01:33 AM

Follow on Google

ADDED : ஜூலை 10, 2025 01:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி, கோபி அருகே தந்தையை தாக்கிய மகனை, போலீசார் கைது செய்தனர்.

கோபி அருகே காசிபாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி, 77, விவசாயி; கடந்த, 6ம் தேதி காலை, 11:00 மணிக்கு இவரது தோட்டத்தின் உள்ள தென்னை மரத்தில் தேங்காய்களை பறிக்க கூலியாட்கள் வந்திருந்தனர். அப்போது அங்கு சென்ற ராமசாமி மகன் கணேசன், 38, யாரும் தேங்காய் பறிக்க கூடாது என கூறியதால், அனைவரும் சென்றனர்.

இதை தட்டிக்கேட்ட ராமசாமியை தகாத வார்த்தையால் பேசி, சொத்தை தனக்கு எழுதி வைக்காமல், போலீசில் புகார் கொடுக்கிறாயா எனக்கூறி, கையால் தாக்கி தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் காயமடைந்த ராமசாமி, கோபி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ராமசாமி கொடுத்த புகார்படி, மகன் கணேசனை கடத்துார் போலீசார் நேற்று கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us