Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மறியல் செய்த மக்களிடம் வம்பிழுத்து சிக்கிய எஸ்.ஐ.,

 மறியல் செய்த மக்களிடம் வம்பிழுத்து சிக்கிய எஸ்.ஐ.,

 மறியல் செய்த மக்களிடம் வம்பிழுத்து சிக்கிய எஸ்.ஐ.,

 மறியல் செய்த மக்களிடம் வம்பிழுத்து சிக்கிய எஸ்.ஐ.,

ADDED : டிச 01, 2025 01:02 AM


Google News
Latest Tamil News
அந்தியூர்: அந்தியூர் அருகே உள்ளூ ர் பிரச்னைக்காக மறியல் செய்த மக்களிடம், ஜீப்பில் மோதி வம்பிழுத்த எஸ்.ஐ.,யால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம், காட்டூர் எல்லைமடை குட்டையில், மாது என்பவருக்கு சொந்தமான எலும்புக்கூடு கிடங்கால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதாக கூறி, நேற்று அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது, எழுமாத்துாரில் துணை முதல்வர் உதயநிதி நிகழ்ச்சி பாதுகாப்புக்காக, அந்தியூரிலிருந்து போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கஸ்துாரி, பெண் போலீசார் ஜீப்பில் வந்தனர். கூட்டத்தை கண்ட டிரைவர், சைரன் ஒலிக்கவிட்டு வழி கேட்டார்.

சாலையில் அமர்ந்திருந்த ஒருவர் மீது ஜீப் மோதியுள்ளது. ஆத்திரமடைந்த மக்கள், ஜீப்பை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.

டிரைவரான எஸ்.ஐ., சக்திவேல், மக்களை தகாத வார்த்தையால் பேசியதால் ஆத்திரமடைந்த மக்கள், ஜீப்பை அடித்தும், அங்குமிங்கும் அசைத்தும் கவிழ்க்க முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது.

இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், மிகுந்த போராட்டத்துக்கு பின், மக்களிடம் பேசி, ஜீப்பை பின்னோக்கி எடுக்கச் சொல்லி, எஸ்.ஐ., சக்திவேலை மக்களிடம் இருந்து மீட்டு அழைத்து சென்றார்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us