/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ உயர்கல்வி படிக்கும் 22 மாணவருக்கு ரூ.2.83 லட்சம் கல்வி உதவித்தொகை உயர்கல்வி படிக்கும் 22 மாணவருக்கு ரூ.2.83 லட்சம் கல்வி உதவித்தொகை
உயர்கல்வி படிக்கும் 22 மாணவருக்கு ரூ.2.83 லட்சம் கல்வி உதவித்தொகை
உயர்கல்வி படிக்கும் 22 மாணவருக்கு ரூ.2.83 லட்சம் கல்வி உதவித்தொகை
உயர்கல்வி படிக்கும் 22 மாணவருக்கு ரூ.2.83 லட்சம் கல்வி உதவித்தொகை
ADDED : ஜூன் 22, 2025 01:19 AM
புன்செய்புளியம்பட்டி, புன்செய் புளியம்பட்டி நகர தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு, மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி, நகர செயலாளர் சிதம்பரம் தலைமையில் நடந்தது. தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜெயராஜ், அவைத் தலைவர் சாகுல் ஹமீது முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் நல்லசிவம், 22 கல்லுாரி மாணவ, மாணவியருக்கு உயர்கல்வி பயில, 2.83 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கினார்.
நிகழ்வில் நகர்மன்ற தலைவர் ஜனார்த்தனன், நிர்வாகிகள் மயில்சாமி, ராஜேந்திரன், நகர்மன்ற உறுப்பினர்கள், இளைஞரணி மகளிரணி, மாணவரணி, சார்பு அணியினர் கலந்து கொண்டனர். உயர்கல்வி பயிலும் ஏழை மாணவர்களை கடந்த, 4 ஆண்டுகளில், 13.௭௩ லட்சம் ரூபாய் கல்வி உதவித்தொகை, இதுவரை வழங்கப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.