Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஏலச்சீட்டு நடத்தி ரூ.70 லட்சம் மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் புகார் தர அழைப்பு

ஏலச்சீட்டு நடத்தி ரூ.70 லட்சம் மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் புகார் தர அழைப்பு

ஏலச்சீட்டு நடத்தி ரூ.70 லட்சம் மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் புகார் தர அழைப்பு

ஏலச்சீட்டு நடத்தி ரூ.70 லட்சம் மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் புகார் தர அழைப்பு

ADDED : ஜன 19, 2024 11:52 AM


Google News
ஈரோடு: ஈரோடு மாவட்டம் புன்செய்புளியம்பட்டி, மாதம்பாளையம் சாலை, அவ்வை வீதியை சேர்ந்த தம்பதியர் செல்வராஜ், 63, மனைவி தமிழரசி, 56; இருவரும் ஏலச்சீட்டு நடத்தினர். கடந்த, 2019 ஜன., முதல் 2021 டிசம்பர் வரை, நுாற்றுக்கும் மேற்பட்டோரிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்து தப்பினர்.

இதனால் பாதிக்கப்பட்ட, 30 பேர் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகாரளித்தனர். இதில் அவர்களிடம், 70 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்திருப்பது உறுதி செய்த போலீசார், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பான வழக்கு கோவை டான்பிட் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கில் குற்றப்பத்திரிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது. எனவே இவர்களால் பாதிக்கப்பட்டு, புகார் தராமல் இருந்தால், மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷனில் நேரடியாக புகார் தரலாம். இத்தகவலை பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us