Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஈரோடு ஜவுளி சந்தையில் விற்பனை மந்தம்

ஈரோடு ஜவுளி சந்தையில் விற்பனை மந்தம்

ஈரோடு ஜவுளி சந்தையில் விற்பனை மந்தம்

ஈரோடு ஜவுளி சந்தையில் விற்பனை மந்தம்

ADDED : ஜன 24, 2024 01:01 PM


Google News
ஈரோடு; வெளி மாநில வியாபாரிகள் வருகை குறைந்ததால், ஈரோடு ஜவுளி சந்தையில் விற்பனை மந்தமானது.

ஈரோட்டில் பன்னீர்செல்வம் பூங்கா அருகே கனி மார்க்கெட், வாரச்சந்தை ஜவுளி கடைகள், டி.வி.எஸ்., வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு சாலை பகுதியில் சந்தைக்கான ஜவுளி விற்பனை நடந்தது.

ஜவுளிகளை கொள்முதல் செய்ய கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிரா மாநில வியாபாரிகள் அதிகம் வருவர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள், கடைக்காரர்கள் வருவார்கள்.

பொங்கல் பண்டிகை விற்பனை முடிந்த நிலையில், வெளி மாநில வியாபாரிகள் மற்றும் கடைக்காரர்கள் நேற்று அதிகம் வராததால் மொத்த விற்பனை மிகவும் குறைந்தது.

இதுபற்றி வியாபாரிகள் கூறுகையில், ''பொங்கல் பண்டிகை முடிந்த நிலையில் விற்பனை மந்தமாக உள்ளது. தைப்பூசத்துக்காக சென்று வரும் பக்தர்கள், வெளியூர்காரர்கள் மட்டும் ஜவுளிகளை வாங்கி சென்றனர்,'' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us