ADDED : ஜூன் 22, 2024 01:10 AM
ஈரோடு: ஈரோடு கஸ்துாரி அரங்கநாதர் கோவிலில் அஞ்சன காப்பு (தைல காப்பு) உற்சவ விழா நேற்று நடந்தது.
முன்னதாக காலையில் திருப்பல்லாண்டு, திருப்பள்ளியெழுச்சி, புண்யாகவாஜனை ஹோமம், பூர்ணாகுதியை தொடர்ந்து, உற்சவருக்கு திருமஞ்சனம், மூலவருக்கு தைல சாத்துப்படி நடந்தது. மதியம் கஸ்துாரி அரங்கநாதர் சுவாமி மூலஸ்தானம் சேருதல், மூலவர் சேவை நடந்தது. இன்று காலை திருமஞ்சனம், திருப்பாவாடை (திருவமுது படைத்தல்) பூஜை சாற்றுமறை, தீபாராதனை நடக்கிறது.