/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ரூ.1.27 கோடிக்கு பழனி தேவஸ்தானம் வெல்லம் கொள்முதல்ரூ.1.27 கோடிக்கு பழனி தேவஸ்தானம் வெல்லம் கொள்முதல்
ரூ.1.27 கோடிக்கு பழனி தேவஸ்தானம் வெல்லம் கொள்முதல்
ரூ.1.27 கோடிக்கு பழனி தேவஸ்தானம் வெல்லம் கொள்முதல்
ரூ.1.27 கோடிக்கு பழனி தேவஸ்தானம் வெல்லம் கொள்முதல்
ADDED : ஜன 11, 2024 12:10 AM
கோபி:ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நாட்டு சர்க்கரை, உருண்டை வெல்லத்துக்கான ஏலம்நடந்தது. நாட்டு சர்க்கரை முதல் தரம் - திடம், 2,870 முதல், 2,900 ரூபாய் வரை விற்றது.
இரண்டாம் தரம் - மீடியம், 2,760 முதல், 2,850 ரூபாய் வரை ஏலம் போனது. வரத்தான, 4,451 மூட்டைகள், 1.26 கோடி ரூபாய்க்கு விற்பனையானது.
அதேபோல் உருண்டை வெல்லம், 40 மூட்டை - 30 கிலோ, வரத்தானது.
அவற்றில் ஒரு மூட்டை, 1,560 ரூபாய் என, 62,000 ரூபாய்க்கு விற்றது. நாட்டு சர்க்கரை மற்றும் உருண்டை வெல்லத்தை, பழனி கோவில் தேவஸ்தான நிர்வாகம், 1.27 கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்ததாக விற்பனை கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.