Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பஸ்சில் குட்கா கடத்தி வந்த ஆசாமிக்கு காப்பு

பஸ்சில் குட்கா கடத்தி வந்த ஆசாமிக்கு காப்பு

பஸ்சில் குட்கா கடத்தி வந்த ஆசாமிக்கு காப்பு

பஸ்சில் குட்கா கடத்தி வந்த ஆசாமிக்கு காப்பு

ADDED : ஜூன் 22, 2024 01:11 AM


Google News
சத்தியமங்கலம்: கர்நாடக மாநிலத்திலிருந்து பஸ்சில் குட்கா கடத்தி வருவதாக, சத்தி போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.

இதன்படி சத்தி பஸ் ஸ்டாண்டுக்கு சென்ற போலீசார், மைசூரிலிருந்து வந்த பஸ்சில் சோதனை செய்தனர். அப்போது சத்தி, கட்டபொம்மன் வீதியை சேர்ந்த செல்வராஜ், 45, என்பவரிடம், 16 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் இருந்தன. போலீசார் அவற்றை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us