Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரூ.1.28 கோடி மதிப்பில் திட்டப்பணி தொடக்கம்

ரூ.1.28 கோடி மதிப்பில் திட்டப்பணி தொடக்கம்

ரூ.1.28 கோடி மதிப்பில் திட்டப்பணி தொடக்கம்

ரூ.1.28 கோடி மதிப்பில் திட்டப்பணி தொடக்கம்

ADDED : செப் 02, 2025 01:05 AM


Google News
சென்னிமலை:சென்னிமலை யூனியனில், 67.88 லட்சம் ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், 1.28 கோடி ரூபாய் மதிப்பில் ஊராட்சிகளில் வீடு வீடாக குப்பை சேகரிக்க, 52 மின்சார ஆட்டோக்களை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நேற்று வழங்கினார்.

சென்னிமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், 65 லட்சம் ரூபாய் மதிப்பில் மேம்பாட்டு பணியையும் தொடங்கி வைத்தார். நிகழ்வில் ராஜ்யசபா எம்.பி., என்.ஆர்.இளங்கோ, சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் செல்வம், பிரபு, நகர செயலாளர் ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us