ADDED : ஜூன் 20, 2025 01:31 AM
ஈரோடு, கோபி அருகேயுள்ள கடத்துார் அரிஜன காலனியை சேர்ந்த பழனி மகன் கோகுல்குமார், 22, கூலி தொழிலாளி. கோபியை சேர்ந்த, 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்துள்ளார்.
இதுகுறித்த தகவலின் அடிப்படையில், கோபி அனைத்து மகளிர் போலீசார், கோகுல் குமார் மீது குழந்தை திருமண தடை சட்டம், போக்சோ பிரிவுகளில் வழக்கு பதிந்தனர்.