Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பி.எப்.,-இ.எஸ்.ஐ., குறைதீர் கூட்டம்

பி.எப்.,-இ.எஸ்.ஐ., குறைதீர் கூட்டம்

பி.எப்.,-இ.எஸ்.ஐ., குறைதீர் கூட்டம்

பி.எப்.,-இ.எஸ்.ஐ., குறைதீர் கூட்டம்

ADDED : ஜூன் 24, 2025 01:23 AM


Google News
ஈரோடு, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மற்றும் இ.எஸ்.ஐ., சார்பில் பெருந்துறை சிப்காட் தொழில் துறை வளர்ச்சி மையத்தில், மாவட்ட விழிப்புணர்வு மற்றும் குறைதீர் கூட்டம் வரும், 27ல் நடக்கிறது. சந்தாதாரர்கள் காலை, 9:30 முதல் மதியம், 1:00 மணி; தொழிலதிபர்கள், விலக்களிக்கப்பட்ட நிறுவனங்கள் மதியம், 2:00 முதல் மாலை, 5:30 மணி வரை பங்கேற்கலாம்.

வருங்கால வைப்பு நிதி மற்றும் தொழிலாளர் காப்பீடு தொடர்பான குறைகளை தெரிவித்து தீர்வு பெறலாம். இத்தகவலை ஈரோடு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன அமலாக்க அதிகாரி சரவணகுமார் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us