/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/முருகன் கோவில் உண்டியல் திறப்பு; ரூ. 36 லட்சம் ரொக்கம் காணிக்கைமுருகன் கோவில் உண்டியல் திறப்பு; ரூ. 36 லட்சம் ரொக்கம் காணிக்கை
முருகன் கோவில் உண்டியல் திறப்பு; ரூ. 36 லட்சம் ரொக்கம் காணிக்கை
முருகன் கோவில் உண்டியல் திறப்பு; ரூ. 36 லட்சம் ரொக்கம் காணிக்கை
முருகன் கோவில் உண்டியல் திறப்பு; ரூ. 36 லட்சம் ரொக்கம் காணிக்கை
ADDED : ஜூன் 20, 2024 06:29 AM
சென்னிமலை : சென்னிமலை முருகன் கோவிலில், நேற்று உண்டியல்கள் திறந்து எண்ணும் பணி நடந்தது.திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரன் கோவில் உதவி ஆணையர் ரமணிகாந்தன் தலைமையில், சென்னிமலை கோவில் செயல் அலுவலர் சரவணன், கோவில் ஆய்வாளர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டன.
நிரந்தர உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக, 33 லட்சத்து, 70 ஆயிரத்து, 765 ரூபாய், 159 கிராம் தங்கம், 1,474 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். அதே போல் திருப்பணி உண்டியலில், இரண்டு லட்சத்து, 34 ஆயிரத்து 312 ரூபாய் இருந்தது. மொத்தம், 36 லட்சத்து, 5,077 ரூபாய் இருந்தது.உண்டியல் எண்ணும் பணியில் கூட்டுறவு வங்கி பணியாளர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், மற்றும் தன்னார்வலர்கள், கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் ஈடுபட்டனர்.