/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/சிறுமிகளை திருமணம் செய்து பலாத்காரம்; 'போக்சோ'வில் சிக்கிய 2 தொழிலாளிகள்சிறுமிகளை திருமணம் செய்து பலாத்காரம்; 'போக்சோ'வில் சிக்கிய 2 தொழிலாளிகள்
சிறுமிகளை திருமணம் செய்து பலாத்காரம்; 'போக்சோ'வில் சிக்கிய 2 தொழிலாளிகள்
சிறுமிகளை திருமணம் செய்து பலாத்காரம்; 'போக்சோ'வில் சிக்கிய 2 தொழிலாளிகள்
சிறுமிகளை திருமணம் செய்து பலாத்காரம்; 'போக்சோ'வில் சிக்கிய 2 தொழிலாளிகள்
ADDED : ஜூலை 25, 2024 01:45 AM
ஈரோடு: சிறுமியை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்ததாக, இரு வாலிபர்கள் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்-பட்டுள்ளது.
ஈரோடு, 46 புதுார் பச்சப்பாளியை சேர்ந்த குமார் மகன் தினேஷ், 24, கூலி தொழிலாளி. இவர், ஈரோட்டை சேர்ந்த, 17 வயது சிறு-மியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்-துள்ளார். பின்னர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமியின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகார்படி, குழந்தை திருமண தடை சட்ட பிரிவு மற்றும் போக்சோ பிரிவுகளின் கீழ், தினேஷ் மீது மகளிர் போலீசார் வழக்-குப்பதிவு செய்தனர்.
* பவானி தளவாய்பேட்டையை சேர்ந்தவர் சக்திவேல், 24, கூலி தொழிலாளி. இவர், பவானியை சேர்ந்த, 15 வயது சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார். பின் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுபற்றி சிறுமியின் பெற்றோர், பவானி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்-தனர். போலீசார் விசாரணை நடத்தி, சக்திவேல் மீது குழந்தை திருமண தடை சட்ட பிரிவு, போக்சோ பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தனர்.