Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/'சுமைதாங்கி உயர்மட்ட பாலப்பணி 5 நாட்களில் முடியும்'

'சுமைதாங்கி உயர்மட்ட பாலப்பணி 5 நாட்களில் முடியும்'

'சுமைதாங்கி உயர்மட்ட பாலப்பணி 5 நாட்களில் முடியும்'

'சுமைதாங்கி உயர்மட்ட பாலப்பணி 5 நாட்களில் முடியும்'

ADDED : ஜூலை 24, 2024 12:46 AM


Google News
பவானி : வெள்ளித்திருப்பூர் அருகே சுமைதாங்கியில், உயர்மட்ட பாலத்தின் இறுதி கட்டப்பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கெட்டிசமுத்திரம் ஏரி உபரிநீர் செல்லும் சுமைதாங்கி பகுதி, பள்-ளமாக இருப்பதால், வெள்ளம் செல்லும்போது அந்தியூர் செல்லும் சாலை முற்றிலும் துண்டிக்கப்படும் சூழல் இருந்தது.

இதனால் சுமைதாங்கியில் உயர்மட்ட பாலம் கட்டித்தர மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதன் அடிப்படையில் பல கோடி ரூபாய் மதிப்பில், நான்கு மாதங்களுக்கும் மேலாக பணி நடந்து வருகி-றது.

அடுத்த மாதம் 7ம் தேதி, புதுப்பாளையம் குருநாத சுவாமி கோவில் பண்டிகை நடப்பதால், பிரதான சாலையான சுமைதாங்-கியில், பாலம் கட்டும் பணியை விரைவில் முடிக்க மக்கள் வலியு-றுத்தினர். இதனால் பாலம் கட்டும் பணியில், இறுதிக்கட்ட வேலை தீவிரமாக நடந்து வருகிறது.

இன்னும் ஐந்து நாட்களில் பணி நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us